'உலக நாடுகளால், வரும் மாதங்களில் கிருமித்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும்'
உலக நாடுகள், வரும் மாதங்களில் நோய்ப்பரவல் நிலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவரலாம் என்று உலகச் சுகாதார நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
உலக நாடுகள், வரும் மாதங்களில் நோய்ப்பரவல் நிலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவரலாம் என்று உலகச் சுகாதார நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தேவையான வளங்களைச் சமமாக விநியோகம் செய்தால் அது சாத்தியமாகும் என்று அது தெரிவித்தது.
இதுவரை உலக அளவில், கிருமித்தொற்றால் 141 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் மாண்டுவிட்டனர்.
குறிப்பாக, 25 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் இடையே, கிருமித்தொற்று வெகு வேகமாகப் பரவி வருவது குறித்து உலகச் சுகாதார நிறுவனம் அக்கறை தெரிவித்துள்ளது.
- Reuters