மெக்சிக்கோ : அரசாங்க நாணயச் சாலையில் 2 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கக் காசுகள் கொள்ளை
மெக்சிக்கோவில், அரசாங்க நாணயச் சாலையில் ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் புகுந்து 2 மில்லியன் டாலருக்கு அதிகமான மதிப்புள்ள தங்கக் காசுகளைத் கொள்ளையடித்துச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிக்கோவில், அரசாங்க நாணயச் சாலையில் ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் புகுந்து 2 மில்லியன் டாலருக்கு அதிகமான மதிப்புள்ள தங்கக் காசுகளைத் கொள்ளையடித்துச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் காசுகளில் 90 விழுக்காடு தங்கம் கலந்துள்ளது.
பட்டப் பகலில் நடந்த அந்தக் கொள்ளைச் சம்பவத்தின்போது, கொள்ளையரில் ஒருவர் துப்பாக்கி ஏந்தி இருந்தார் என்று அதிகாரிகள் கூறினர்.
அந்தச் சம்பவம், மெக்சிக்கோ சிட்டியில் அண்மையில் நடந்துள்ள குறிப்பிடத்தக்க பெரிய திருட்டுச் சம்பவம்.
அந்த நகரில் வன்முறையும் கொலைச் சம்பவங்களும் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளன.