அமெரிக்கா: 71ஆம் மாடியிலிருந்து தொங்கிய ஊழியர்கள் மீட்பு (காணொளி)
அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரத்தில் சன்னல் கழுவும் ஊழியர்கள் சிலரின் உயிர் 71ஆம் மாடியில் ஊசலாடியது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரத்தில் சன்னல் கழுவும் ஊழியர்கள் சிலரின் உயிர் 71ஆம் மாடியில் ஊசலாடியது.
நகரத்தின் ஆக உயரமான கட்டடத்தில் காலை 7.45 மணி அளவில் சன்னல்களைக் கழுவிக்கொண்டிருந்தபோது அவர்கள் நின்றுகொண்டிருந்த தளம் கட்டுப்பாட்டின்றி அசையத் தொடங்கியது.
கட்டடத்தின் ஆக உயரமான மாடியில் அபாயகரமாக அது ஊசலாடியது. கட்டடச் சன்னல்களின்மீது தளம் மோதிக் கண்ணாடிச் சில்லுகள் கீழே விழத் தொடங்கின.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பாளர்கள், முதலில் இடத்தைச் சுற்றிப் பாதுகாப்புத் தடுப்புகளைப் போட்டனர். 71-ம் மாடிக்குச் சென்று மணல் பைகளால் ஆடும் தளத்தை நிறுத்தினர். அதன் பின்னர், ஊழியர்களை மீட்டனர் தீயணைப்பாளர்கள்.
சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. தளத்தில் கோளாறு குறித்து விசாரணை தொடர்கிறது.