Grand Canyon பள்ளத்தாக்கில் வான் சாகசத்தில் ஈடுபட்ட ஆடவர் மரணம்
அமெரிக்காவின் Grand Canyon பள்ளத்தாக்கிற்கு அருகே வான் சாகசம் (skydiving) புரிந்த ஆடவர் ஒருவர் மாண்டார்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
அமெரிக்காவின் Grand Canyon பள்ளத்தாக்கிற்கு அருகே வான் சாகசம் (skydiving) புரிந்த ஆடவர் ஒருவர் மாண்டார்.
பயிற்றுவிப்பாளருடன் இணைந்து சாகசத்தில் ஈடுபட்டார் 55 வயது கிறிஸ்டஃபர் ஸ்வேல்ஸ் (Christopher Swales).
இருவரும் தறையிறங்கும்போது சிரமத்தை எதிர்நோக்கினர். அவர்கள் தரையில் பலமாய் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தில் பயிற்றுவிப்பாளர் உயிர்தப்பினார்.
மருத்துவமனைக்கு அனுபபிவைக்கப்பட்ட ஸ்வேல்ஸ் பின்னர் காயம் காரணமாக மாண்டார்.
சம்பவத்தின் தொடர்பில் விசாரணை நடந்து வருகிறது. இதில் எவ்வித சதிநாச வேலையும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.