Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மாணவர்களிடம் துப்பாக்கிச்சூட்டுக் காணொளிகளைக் காட்டிய ஃபுளோரிடா துப்பாக்கிக்காரர்

அமெரிக்காவின் ஃபுளோரிடா கடற்படைத் தளத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் தொடர்பில், சவுதி அரேபியாவைச் சேர்ந்த மாணவர்கள் சிலரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

வாசிப்புநேரம் -
மாணவர்களிடம் துப்பாக்கிச்சூட்டுக் காணொளிகளைக் காட்டிய ஃபுளோரிடா துப்பாக்கிக்காரர்

(படம்: REUTERS/Michael Spooneybarger)


அமெரிக்காவின் ஃபுளோரிடா கடற்படைத் தளத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் தொடர்பில், சவுதி அரேபியாவைச் சேர்ந்த மாணவர்கள் சிலரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

முகமது சயிது அல்ஷம்ரானி என்ற சவுதி அரேபியப் பயிற்சி மாணவர் கைத்துப்பாக்கியால் நடத்திய தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர்.

எட்டுப் பேர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய முகமது சயிதை அமெரிக்க இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

சென்ற வாரம், வேறொரு துப்பாக்கிச் சூடு பற்றிய காணொளியை முகமது சயிது மற்றவர்களிடம் போட்டுக் காட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதற்கு முன்னர், சமூக வலைத் தளங்களில் அவர், அமெரிக்காவுக்கு எதிரான கருத்துகளைப் பதிவு செய்திருப்பதாகவும் அங்குள்ள ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

என்றாலும், தற்போதுள்ள சூழலில் கடற்படைத் தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலை, பயங்கரவாதச் செயலாக வகைப்படுத்த முடியாது என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் (Mark Esper) கூறினார்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்