ஆஸ்திரேலியா: தாயின் தலையைத் துண்டித்ததாக மகள் மீது குற்றச்சாட்டு
தாயின் தலையைத் துண்டித்து அண்டைவீட்டாரின் இல்லத்துக்கு வெளியே விட்டுச் சென்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் பெண் ஒருவர்.
சிட்னி: தாயின் தலையைத் துண்டித்து அண்டைவீட்டாரின் இல்லத்துக்கு வெளியே விட்டுச் சென்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் பெண் ஒருவர்.
நீதிமன்ற ஆணைப்படி அவர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
தாயின் உடல் அவரின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது
தாயின் தலையை நடைபாதையில் வைத்ததாகச் சந்தேகிக்கப்படும் 25 வயது மகள் கைதுசெய்யப்பட்டார்.
சம்பவத்தை 4 வயதுடைய உறவினர் ஒருவர் பார்த்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்தச் சிறுவன் காயங்களுக்குச் சிகிச்சை பெற்று குடும்பத்தாரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள் அதை மிகக் கொடூரமான ஒன்று என வருணித்துள்ளனர்.