பிரிட்டன் ஹீத்ரோ விமானநிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 88% சரிந்தது
பிரிட்டன் ஹீத்ரோ விமானநிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 88% சரிந்தது
பிரிட்டனின் ஹீத்ரோ விமானநிலையத்தில் ஜூலை மாதப் பயணிகளின் எண்ணிக்கை 88% சரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
COVID-19 நோய்ப்பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடுகளால், பயணிகள் எண்ணிக்கை குறைந்தது.
பிரிட்டனுக்குச் செல்லும் பயணிகள், 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவதால் விமான நிலையத்தின் 60 விழுக்காட்டு விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
முடக்கநிலைக்குப் பிறகு ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் குடிமக்கள், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
ஸ்பெயின், பெல்ஜியம், பஹாமாஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று திரும்பும் பிரிட்டிஷ் குடிமக்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
வரும் நாள்களில், தனிமைப்படுத்தப்படும் பட்டியலில் மேலும் சில நாடுகள் சேர்க்கப்படலாம் என்று பிரிட்டன் தெரிவித்தது.
விமான நிலையத்தில் மருத்துவச் சோதனைகள் நடத்தப்படுவதால், விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் படிப்படியாக வழக்க நிலைக்குத் திரும்புமென விமான நிலைய நிர்வாகம் நம்புகிறது.