ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில் புதிய பேரணி
ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில் புதிய பேரணி நடத்த அழைப்புவிடுக்கப்பட்டதையடுத்து நூற்றுக்கணக்கானோர் அங்கு கூடியுள்ளனர்.
ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில் புதிய பேரணி நடத்த அழைப்புவிடுக்கப்பட்டதையடுத்து நூற்றுக்கணக்கானோர் அங்கு கூடியுள்ளனர்.
முன்னதாகத் தடைபட்டிருந்த விமான நிலையச் சேவைகள், இன்று காலை 6 மணியிலிருந்து வழக்கநிலைக்குத் திரும்பத் தொடங்கின.
இருப்பினும் இடையூறுகள் ஏற்படும் சாத்தியம் இருப்பதாக அதிகாரிகள் முன்னரே எச்சரித்திருந்தனர்.
விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள், கடந்த 4 நாள்களாகக் குந்தியிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று விமானச் சேவைகள் ரத்தானதையடுத்து ஏற்பட்ட சிக்கலுக்குத் தீர்வுகாண விமான நிறுவனங்கள் முனைந்துள்ளன.