Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில் புதிய பேரணி

ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில் புதிய பேரணி நடத்த அழைப்புவிடுக்கப்பட்டதையடுத்து நூற்றுக்கணக்கானோர் அங்கு கூடியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில் புதிய பேரணி

படம்: REUTERS

ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில் புதிய பேரணி நடத்த அழைப்புவிடுக்கப்பட்டதையடுத்து நூற்றுக்கணக்கானோர் அங்கு கூடியுள்ளனர்.

முன்னதாகத் தடைபட்டிருந்த விமான நிலையச் சேவைகள், இன்று காலை 6 மணியிலிருந்து வழக்கநிலைக்குத் திரும்பத் தொடங்கின.

இருப்பினும் இடையூறுகள் ஏற்படும் சாத்தியம் இருப்பதாக அதிகாரிகள் முன்னரே எச்சரித்திருந்தனர்.

விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள், கடந்த 4 நாள்களாகக் குந்தியிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று விமானச் சேவைகள் ரத்தானதையடுத்து ஏற்பட்ட சிக்கலுக்குத் தீர்வுகாண விமான நிறுவனங்கள் முனைந்துள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்