அர்ஜென்ட்டினாவிற்கு 50 பில்லியன் டாலர் உதவி நிதித் திட்டம்
அனைத்துலகப் பணநிதியம் அர்ஜென்ட்டினாவிற்கான 50 பில்லியன் டாலர் உதவி நிதித் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
வாஷிங்டன்: அனைத்துலகப் பணநிதியம் அர்ஜென்ட்டினாவிற்கான 50 பில்லியன் டாலர் உதவி நிதித் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. பணவீக்கம், நிதிப் பற்றாக்குறை, வலுவிழந்து வரும் நாணய மதிப்பு முதலியவற்றைச் சமாளிக்க அந்த நிதி உதவும்.
வழங்கப்படும் உதவித் திட்டத்திலிருந்து முதலில் 15 பில்லியன் டாலரைப் பெற்றுக் கொள்ள அர்ஜென்ட்டினா திட்டமிடுகிறது. அதில் பாதித்தொகையை வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளுக்கு அது பயன்படுத்திக்கொள்ளும்.
எஞ்சியிருக்கும் 35 பில்லியன் டாலரை நெருக்கடி நேரத்தில் பயன்படுத்திக்கொள்வது அர்ஜென்ட்டினாவின் இலக்கு என்று அனைத்துலகப் பணநிதியம் தெரிவித்தது.