Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மும்பையில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் மரணம்

மழையால் பெருகிய நீரின் அளவு 12 மணிநேரத்தில் 222 மில்லிமீட்டர் எனப் பதிவாகியுள்ளது.

வாசிப்புநேரம் -

இந்தியாவின் மும்பை நகரில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்துவிழுந்ததில் குறைந்தது 11 பேர் மாண்டனர், 7 பேர் காயமுற்றனர்.

இந்தியாவில் பெய்யும் கனத்த மழை காரணமாகக் கட்டடம் இடிந்துவிழுந்ததாகக் கூறப்பட்டது.

இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடியவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

மும்பையின் பல பகுதிகளில் கனத்த பருவமழையால் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

மழையால் பெருகிய நீரின் அளவு 12 மணிநேரத்தில் 222 மில்லிமீட்டர் எனப் பதிவாகியுள்ளது.

சாலைகள், ரயில் தடங்கள், வீடுகள் ஆகியவை நீரில் மூழ்கியுள்ளன.

-AP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்