பயங்கரமான படங்களைப் பதிவேற்றம் செய்த ஈரானிய Instagram நட்சத்திரம் கைது
பயங்கரமாகத் தோற்றமளிக்கும் படங்களைப் பதிவேற்றம் செய்த Instagram நட்சத்திரம் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரமாகத் தோற்றமளிக்கும் படங்களைப் பதிவேற்றம் செய்த Instagram நட்சத்திரம் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெய்வ நிந்தனை, வன்முறையைத் தூண்டுவது போன்றவற்றின் அடிப்படையில் சஹர் தபார் (Sahar Tabar) கைது செய்யப்பட்டார்.
முகத்தில் அவர் சுமார் 50 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.நடிகை எஞ்சலினா ஜோலியைப் (Angelina Jolie) போன்ற தோற்றத்தைப் பெற அவர் அந்தச் சிகிச்சைகளை மேற்கொண்டதாக நம்பப்படுகிறது.
வீங்கிய உதடுகள், குழியாக இருக்கும் கன்னங்களுடன் தோற்றமளித்த 22 வயது தபார் உலகெங்கும் பரபரப்பாகப் பேசப்பட்டார்.
தாம் பதிவேற்றம் செய்யும் படங்கள் பலவற்றை மின்னியல் முறையில் மாற்றிக் காட்டுவதாகக் கூறினார் அவர்.
பொதுமக்கள் சிலரின் புகார்களைத் தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சட்டவிரோதமான முறையில் சொத்து வாங்கியது, முறையற்ற ஆடைகளை அணிவது ஆகியவற்றின் தொடர்பில் அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து தபார் தம் Instagram கணக்கை மூடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஈரானில் சமூக ஊடக நட்சத்திரங்கள் கைது செய்யப்படுவது இது முதல்முறையல்ல.