ஈரானில் நோய்த்தொற்றுக்கு 8 பேர் பலி; 43 பேர் பாதிப்பு
ஈரானில் நோய்த்தொற்றுக்கு 8 பேர் பலி; 43 பேர் பாதிப்பு
ஈரானில் மேலும் 15 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாய் அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கூறியிருக்கிறார்.
மேலும் அங்கு கிருமிக்குப் பலியானோர் எண்ணிக்கை 8 க்கு உயர்ந்ததாக அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 43 ஆகியிருக்கிறது.
ஈரான் நேற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு நகரங்களில் பள்ளிகளையும், பல்கலைக்கழகங்களையும் மூடியது.
சென்ற புதன்கிழமை, கோம் (Qom) நகரில் இரு முதியவர்கள் மாண்டுவிட்டதாய் ஈரான் அறிவித்தது.
மத்திய கிழக்கு வட்டாரத்தில் நோயால் ஏற்பட்ட முதல் மரணம் அது.