ஈரானில் சில முக்கிய புள்ளிகளின் Instagram கணக்கு முடக்கம்
ஈரானியப் புரட்சிப் படைத் தளபதிகள் சிலரின் Instagram கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
ஈரானியப் புரட்சிப் படைத் தளபதிகள் சிலரின் Instagram கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த மாத முற்பகுதியில், அமெரிக்கா ஈரானியப் புரட்சிக் காவல்படை ஒன்றை, வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்திருந்தது.
ஆனால், அமெரிக்கா ஈரான் மீது பல்வேறு தடைகளை விதித்துள்ளது; அதற்குக் கட்டுப்படும் விதமாகக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாய் Instagram தெரிவித்தது.
ஈரானில் பொதுவாக Facebook, Twitter, Telegram போன்ற சமூக ஊடகத் தளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. Instagram சேவையை மட்டுமே அங்கு பயன்படுத்த முடியும்.
மேலும் தணிக்கைக்கு உட்படாத சேவையாக Instagram இருப்பதால், பலரும் அதை நாடுகின்றனர்.