ஈரானில் தற்கொலைத் தாக்குதல் - 27 பாதுகாப்பு அதிகாரிகள் மாண்டனர்
ஈரானின் தென்கிழக்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், குறைந்தது 27 பாதுகாப்பு அதிகாரிகள் மாண்டனர்.
ஈரானின் தென்கிழக்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், குறைந்தது 27 பாதுகாப்பு அதிகாரிகள் மாண்டனர்.
அதிகாரிகள் பயணம் செய்த பேருந்தின் மீது, தாக்குதல்காரர் வெடிபொருள்கள் நிரம்பிய காரை மோதினார்.
Jaish al-Adl அமைப்பு அந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டது.
பலுச்சி சிறுபான்மை இனத்தவருக்குக் கூடுதல் உரிமைகளை அது கோருகிறது.
ஈரான் அதனைப் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தியிருந்தாலும், பெரிய அளவிலான அச்சுறுத்தலாக அதனைக் கருதவில்லை.