உக்ரேனிய விமான விபத்துக்கு மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்றமே காரணம் - கனடியப் பிரதமர்
உக்ரேனிய விமானம் வீழ்த்தப்பட்டதற்கு, மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்றமே காரணம் என்று கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) குற்றஞ்சாட்டியுள்ளார்.
உக்ரேனிய விமானம் வீழ்த்தப்பட்டதற்கு, மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்றமே காரணம் என்று கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) குற்றஞ்சாட்டியுள்ளார்.
கனடியப் போக்குவரத்துப் பாதுகாப்புக் கழகம், விமான விபத்து தொடர்பான விசாரணையில் பங்கேற்றுள்ளது.
உக்ரேன், ஈரான் ஆகிய நாடுகளின் அதிகாரிகளுடன் அமெரிக்காவின் போயிங் நிறுவனப் பிரதிநிதிகளும் அந்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், விமானம் வீழ்த்தப்பட்டதன் தொடர்பில் இருக்கும் கேள்விகளுக்குப் பதில் தேவை என்று கனடா வலியுறுத்தியுள்ளது.