பிரிட்டனிலிருந்து வருவோர் கட்டாயம் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்: அயர்லந்து
பிரிட்டனிலிருந்து வருவோரை 14 நாள்களுக்குக் கட்டாயமாகத் தனிமைப்படுத்த அயர்லந்து முடிவெடுத்துள்ளது.
பிரிட்டனிலிருந்து வருவோரை 14 நாள்களுக்குக் கட்டாயமாகத் தனிமைப்படுத்த அயர்லந்து முடிவெடுத்துள்ளது.
அது, அடுத்த மாதத்திலிருந்து நடப்புக்கு வரும்.
சில நாடுகளுக்கான பயணத் தடைகளை தளர்த்த அயர்லந்து திட்டமிடுகிறது.
நாட்டுக்குள் அனுமதிக்கப்படும் வெளிநாட்டினரின் பட்டியலில் பிரிட்டன் இருப்பதற்கான சாத்தியம் மிகக் குறைவு என்று அயர்லந்து அமைச்சரவைக் குழு குறிப்பிட்டது.
COVID-19 நோய்ப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் நாடுகளிலிருந்து வரும் பயணிகளையும் 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தும் உத்தரவை அயர்லந்து நீக்கத் திட்டமிட்டுள்ளது.