இஸ்ரேலில் மீண்டும் பரவும் நோய்த்தொற்று - நாடு முழுவதும் இரண்டாம் முடக்கநிலை அறிவிப்பு
இஸ்ரேலில் கொரோனா கிருமிப்பரவலை முன்னிட்டு நாடளாவிய முடக்கநிலை மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் கொரோனா கிருமிப்பரவலை முன்னிட்டு நாடளாவிய முடக்கநிலை மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளிலேயே நாடளாவிய முடக்கநிலையை மீண்டும் அமல்படுததியிருக்கும் முதல் நாடு இஸ்ரேல்.
பெரும்பாலான நாடுகளில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே முடக்கநிலை இரண்டாவது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
COVID-19 நோய்ப் பரவலைத் தடுக்க நாடளாவிய முடக்கநிலை அவசியம் என்று இஸ்ரேலியப் பிரதமர் பென்யமின் நெட்டன்யாஹூ (Benjamin Netanyahu) கூறினார்.
அது, தம் நாட்டு மக்கள் ஒவ்வொருவர்மீதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.