இத்தாலியில் COVID-19 கிருமித்தொற்றால் 3-ஆவது மரணம்
இத்தாலியில் COVID-19 கிருமித்தொற்றால் 3-ஆவது மரணம் நேர்ந்துள்ளது.
இத்தாலியில் COVID-19 கிருமித்தொற்றால் 3-ஆவது மரணம் நேர்ந்துள்ளது.
மாது ஒருவர், கிருமிப் பரவலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள லொம்பார்டி பகுதியில் மாண்டார்.
அவர் ஏற்கனவே, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அந்நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவரும் வேளையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாலியில் இதுவரை 132 பேருக்கு COVID-19 கிருமி தொற்றியுள்ளது.
மக்கள் பீதியடையவேண்டாம் என்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றும்படியும் அந்நாட்டு பிரதமர் குஸ்ப்பே கொன்டெ (Giuseppe Conte) கோரியுள்ளார்.
COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கு அதிகச் சோதனைகள் நடத்தப்படுவதால், எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று அவர் கூறினார்.
இத்தாலியில், நோய் பரவியுள்ள இடங்களில் போக்குவரத்துத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட வட்டாரத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதுடன் பொது நிகழ்ச்சிகள் தடைசெய்யப்பட்டுள்ளன.