Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இத்தாலியில் COVID-19 கிருமித்தொற்றால் 3-ஆவது மரணம்

இத்தாலியில் COVID-19 கிருமித்தொற்றால் 3-ஆவது மரணம் நேர்ந்துள்ளது.

வாசிப்புநேரம் -
இத்தாலியில் COVID-19 கிருமித்தொற்றால் 3-ஆவது மரணம்

(படம்: AFP)

இத்தாலியில் COVID-19 கிருமித்தொற்றால் 3-ஆவது மரணம் நேர்ந்துள்ளது.

மாது ஒருவர், கிருமிப் பரவலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள லொம்பார்டி பகுதியில் மாண்டார்.

அவர் ஏற்கனவே, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

அந்நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவரும் வேளையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாலியில் இதுவரை 132 பேருக்கு COVID-19 கிருமி தொற்றியுள்ளது.

மக்கள் பீதியடையவேண்டாம் என்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றும்படியும் அந்நாட்டு பிரதமர் குஸ்ப்பே கொன்டெ (Giuseppe Conte) கோரியுள்ளார்.

COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கு அதிகச் சோதனைகள் நடத்தப்படுவதால், எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று அவர் கூறினார்.

இத்தாலியில், நோய் பரவியுள்ள இடங்களில் போக்குவரத்துத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட வட்டாரத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதுடன் பொது நிகழ்ச்சிகள் தடைசெய்யப்பட்டுள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்