Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இத்தாலியில் COVID-19 மரணங்கள் கணிக்கப்பட்டதைவிட பாதி மடங்கு அதிகமாக இருக்கக்கூடும்

இத்தாலியில், COVID-19 நோய்ப் பரவலால் ஏற்பட்ட மரணச் சம்பவங்களின் எண்ணிக்கை கணிக்கப்பட்டதைவிட 19,000 பேர் அதிகமாக இருக்கக்கூடும் என்று அந்நாட்டு தேசிய சமூகப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
இத்தாலியில் COVID-19 மரணங்கள் கணிக்கப்பட்டதைவிட பாதி மடங்கு அதிகமாக இருக்கக்கூடும்

(படம்: REUTERS/Alberto Lingria)

இத்தாலியில், COVID-19 நோய்ப் பரவலால் ஏற்பட்ட மரணச் சம்பவங்களின் எண்ணிக்கை கணிக்கப்பட்டதைவிட 19,000 பேர் அதிகமாக இருக்கக்கூடும் என்று அந்நாட்டு தேசிய சமூகப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

INPS எனும் அந்த அமைப்பு மேற்கொண்ட புதிய ஆய்வில் அதிகாரபூர்வ மரணங்களின் எண்ணிக்கை நம்பகமற்றதாக தென்படுவதாய் குறிப்பிட்டது.

மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் மொத்தமாகச் சுமார் 156,000 மரணங்கள் பதிவாகியதை ஆய்வு சுட்டியது.

ஆனால், அவற்றுள் 27,000 மரணங்கள் மட்டும் நோய்த்தொற்றுடன் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால், உண்மையாகவே அதைவிட அதிக எண்ணிக்கையிலான நோய்ப் பரவல் மரணங்கள் நேர்ந்திருக்கும் என்று அமைப்பு குறிப்பிட்டது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி இத்தாலியில் 32,486 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர்.

அவர்களில் 26,000 பேர் லம்பார்டி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்