Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 கிருமித்தொற்றால் இத்தாலியில் தனிமைப்படுத்தப்படும் 12 நகரங்கள்

இத்தாலியில் 12 நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு, மூவர் COVID-19 கிருமித்தொற்றால் மாண்டதைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
COVID-19 கிருமித்தொற்றால் இத்தாலியில் தனிமைப்படுத்தப்படும் 12 நகரங்கள்

(படம்: ANDREAS SOLARO/AFP

இத்தாலியில் 12 நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அங்கு, மூவர் COVID-19 கிருமித்தொற்றால் மாண்டதைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் 152 பேருக்கு கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கானோர் வடக்கிலுள்ள லொம்பார்டி, வேனெட்டோ (Veneto) வட்டாரங்களுக்குச் செல்லவும், வெளியேறவும் அடுத்த இரண்டு வாரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வட்டாரத்திலுள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

அரும்பொருளகங்களும், திரையரங்குகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கிருமி மேலும் பரவாமல் தடுக்க அத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் என்று இத்தாலியப் பிரதமர் குஸ்ப்பே கொன்டெ (Giuseppe Conte) கூறினார்.

காவல்துறையினரும், ராணுவத்தினரும் முழு வீச்சில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எவரேனும் விதிகளை மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்