Johnson & Johnson-இன் மில்லியன் கணக்கான முறை போடும் அளவுள்ள COVID-19 தடுப்புமருந்தை அப்புறப்படுத்த அமெரிக்கா உத்தரவு
Johnson & Johnson-இன் மில்லியன் கணக்கான முறை போடும் அளவுள்ள COVID-19 தடுப்புமருந்தை அப்புறப்படுத்த அமெரிக்கா உத்தரவு
Johnson & Johnson நிறுவனம், மில்லியன் கணக்கான முறை போடும் அளவுள்ள தடுப்புமருந்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகம் கூறியுள்ளது.
நிறுவனத்தின் பால்ட்டிமோர் (Baltimore) தொழிற்சாலையில் அந்தத் தடுப்புமருந்து தயாரிக்கப்பட்டது.
அங்கு உற்பத்திப் பிரச்சனைகள் கண்டறியப்பட்டன.
சரியாக எத்தனை முறை போடத் தேவையான தடுப்புமருந்து பாதிக்கப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
Johnson & Johnson நிறுவனத் தடுப்புமருந்தின் இரண்டு தொகுதிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சில தொகுதிகள் பயன்பாட்டுக்கு உகந்தவை அல்ல என்று தெரிவிக்கப்பட்டது.
மற்றவை ஆய்வு செய்யப்படுகின்றன.