நியூசிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் இன்னும் 3 வாரங்களில் அரசாங்கத்தை அமைக்கத் திட்டம்
நியூசிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் இன்னும் மூன்று வாரங்களில் அரசாங்கத்தை அமைக்கத் திட்டம்
நியூசிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் அரசாங்கத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளார்.
பசுமைக் கட்சியுடன் இணைந்து ஆட்சியை அமைக்கத் திட்டமுள்ளதா என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
அண்மையில் அந்நாட்டில் நடந்த பொதுத்தேர்தலில் தொழிற்கட்சி சார்பாகப் போட்டியிட்ட திருவாட்டி ஆர்டன் பெரும்பான்மை வாக்குகளைக் கைப்பற்றி வெற்றிபெற்றார்.
அதனால் அவரது கட்சி தன்னிச்சையாக அரசாங்கத்தை அமைக்கமுடியும்.
தற்போதைக்கு நியூசிலந்தில் COVID-19 நோய்த்தொற்று தொடர்பில் புதிதாக எந்தக் கட்டுப்பாடுகளையும் ் விதிக்கத் திட்டமில்லை என்றும் திருவாட்டி ஆர்டன் கூறினார்.
நியூசிலந்தில் இன்று சமூக அளவில் ஒருவருக்குக் கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டது.