குழந்தையை ஆற்றில் வீசிய ஆடவர்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆற்றில், மாண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் தந்தைமீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆற்றில், மாண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் தந்தைமீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஜேம்ஸ் கரி (James Currie) என்பவர் தமது 7மாத ஆண் குழந்தையை ஆற்றில் வீசியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அந்தச் சம்பவத்துக்குப் பின்னர் அந்த 37 வயது நபர், தாய்லந்துக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
"இனி ஒருபோதும் பிள்ளையைப் பார்க்க முடியாது" என்று தமது மனைவிக்கு அந்த நபர் குறுந்தகவல் அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பேங்காக்கில் (Bangkok) தரையிறங்கியதும், அந்த நபர் கைதுசெய்யப்பட்டு, அமெரிக்காவுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.
அவருக்குப் பிணை வழங்கக் கூடாது என நியூ யார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுத் தடுத்து வைத்துள்ளது.
குழந்தை எதனால் மாண்டது என்பது பற்றிய விசாரணை தொடர்கிறது.