பாரிஸ் நகைக் கடையில் கொள்ளைபோன நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டன
அந்தப் பைக்குள், கடையிலிருந்து திருடப்பட்ட நாலரை மில்லியன் யூரோ மதிப்புள்ள அனைத்து நகைகளும் இருந்தன.
பாரிஸ் நகரின் ஐந்து நட்சத்திர ரிட்ஸ் ஹோட்டலில் உள்ள நகைக் கடையில் கொள்ளைபோன நகைகள் திரும்பக் கிடைத்துள்ளன.
கொள்ளையர்களில் ஒருவர், நகைகள் அடங்கிய பையைக் கீழே விட்டுச் சென்றதாகக் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
முன்னதாக, ஐந்து பேர் கொண்ட கொள்ளைக் கும்பல், நகைக் கடையின் சன்னலைக் கோடரியால் உடைத்து அங்கிருந்த நகைகளைக் கொள்ளையடித்தது.
அப்போது சுற்றுக்காவல் பணியிலிருந்த காவல் அதிகாரி ஒருவரின் முயற்சியால், கொள்ளையர்களால் நினைத்ததைச் சாதிக்கமுடியாமற்போனது.
அந்தச் சம்பவத்தில் மூன்று சந்தேக நபர்கள் கைதாயினர்.
ஹோட்டலுக்கு வெளியே காத்திருந்த இருவர் வாகனங்களில் தப்பினர்.
அப்படித் தப்பியவர்களில் ஒருவர், பாதசாரி ஒருவர் மீது மோதியபோது நகைககள் அடங்கிய பையைத் தவற விட்டதாக நம்பப்படுகிறது.