Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

காபூலில் குண்டுவெடிப்பு: 31 பேர் மரணம், 54 பேர் காயம்

வாக்காளர் பதிவு நிலையத்துக்கு வெளியே அந்தத் தற்கொலைத் தாக்குதல் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

வாசிப்புநேரம் -
காபூலில் குண்டுவெடிப்பு: 31 பேர் மரணம், 54 பேர் காயம்

(படம்:REUTERS)

ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 31 பேர் மாண்டனர். மேலும் 54 பேர் காயமடைந்தனர்.

தாக்குதலுக்கு ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.

வாக்காளர் பதிவு நிலையத்துக்கு வெளியே அந்தத் தற்கொலைத் தாக்குதல் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

நிலையத்தின் நுழைவாயிலுக்கு அருகே காத்திருந்த கூட்டத்தை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

சென்ற வாரம் வாக்காளர் பதிவு தொடங்கியதிலிருந்து ஆஃப்கானிஸ்தானில் தாக்குதல்கள் தொடர்கின்றன. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறுவதையொட்டி அங்கு வாக்காளர் பதிவு நடைபெறுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்