காபுலில் திருமண மண்டபத்தில் குண்டு வெடித்ததில் 63 பேர் மரணம்; 180 பேர் காயம்
திருமண நிகழ்வின்போது தற்கொலையாளி வெடிகுண்டைத் தகர்த்ததாகச் சம்பவத்தை நேரில் பார்த்தோர் BBCஇடம் கூறியுள்ளனர்.
ஆஃப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் திருமண மண்டபத்தில் குண்டு வெடித்ததில் 63 பேர் மாண்டனர்; 180க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
திருமண நிகழ்வின்போது தற்கொலையாளி வெடிகுண்டைத் தகர்த்ததாகச் சம்பவத்தை நேரில் பார்த்தோர் BBCஇடம் கூறியுள்ளனர்.
உள்ளூர் நேரப்படி நேற்றிரவு சுமார் 10. 40 மணிக்குச் சம்பவம் நடந்தது.
அந்தத் தாக்குதலுக்குத் தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.
எனினும் திருமண மண்டபத்தில் நடந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்க அது மறுத்தது.
இதற்கிடையே தலிபான் அமைப்புக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடக்கும் அமைதிப் பேச்சில் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
கத்தாரின் தலைநகர் டோஹாவில் நடக்கும் சந்திப்புகளில் முன்னேற்றம் இருப்பதாக இருதரப்பும் கூறியுள்ளது.