Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

"மடிக்கணினிகளில் எப்போது வேண்டுமோ வெடிகுண்டு வைக்கப்படலாம்"

மடிக்கணினிகளிலில் எப்போது வேண்டுமோ வெடிகுண்டு வைக்கப்படலாம்- அதிகாரிகள் எச்சரிக்கை

வாசிப்புநேரம் -
"மடிக்கணினிகளில் எப்போது வேண்டுமோ வெடிகுண்டு வைக்கப்படலாம்"

(படம்: Reuters)

மடிக்கணினிகளில் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளைப் பொருத்தலாம் என ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மூத்த அதிகாரி எச்சரித்துள்ளார்.
அதனை எப்போது பயங்கரவாதிகள் பயன்படுத்துவர் என்பதே கேள்வி என்றார் அவர்.

விமானங்களில் அதனால் பேரழிவு ஏற்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

ஐக்கிய நாட்டு நிறுவனப் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் செயலாக்கக் குழுத் தலைவர், பிரஸல்சில் அந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.

விமானங்களில் மடி கணினிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீட்டிப்பது குறித்து அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு நடந்தது.

அது நான்கு மணி நேரம் நீடித்தது.
வட-ஆப்பிரிக்கா, மத்தியக் கிழக்கு போன்றவற்றில் உள்ள 10 விமான நிலையங்களில் இருந்து வரும் விமானங்களில் மடி கணினிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்