ஆஸ்திரேலியா: 90 மில்லியன் டாலர் போதைப் பொருள் பறிமுதல் - ஆறு பேர் கைது
ஆஸ்திரேலியாவிலும், நியூஸிலந்திலும் நடத்தப்பட்ட போதைப் பொருள் ஒழிப்புச் சோதனைகளின்போது ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள்.
ஆஸ்திரேலியாவிலும், நியூஸிலந்திலும் நடத்தப்பட்ட போதைப் பொருள் ஒழிப்புச் சோதனைகளின்போது ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள்.
சந்தேக நபர்கள் பிரிட்டனிலிருந்து போதைப் பொருளை விநியோகம் செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்கள்.
அவர்களிடமிருந்து அந்த வட்டாரத்தில் இதுவரையில்லாத வகையில், 90 மில்லியன் ஆஸ்திரேலியன் டாலர் மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளைக் கொண்டு 12 மில்லியன் எக்ஸ்டஸி மாத்திரைகளைத் தயாரிக்க முடியும்.
கைது செய்யப்பட்ட பிரிட்டிஷ் குடிமக்கள் நால்வரும் 40 லிருந்து 60 வயதுக்கு உட்பட்டவர்கள். ஓர் ஆஸ்திரேலிய ஆடவருக்கு வயது 26. மற்றோர் ஆஸ்திரேலியப் பெண்ணின் வயது 51.
நியூஸிலந்தின் ஆக்லந்தில் நடத்தப்பட்ட சோதனையில் 200 கிலோகிராம் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.