வீட்டிற்குள் புகுந்து பூனையைக் கொன்ற சிங்கம்
வீட்டிற்குள் சிங்கம் இருப்பதை அறிந்த வீட்டு உரிமையாளர் வன அதிகாரிகளை அழைத்து சிங்கத்தை விரட்ட முயற்சி செய்தார்.
அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் மலைச்சிங்கம் புகுந்து பூனையைக் கொன்றது.
வீட்டிற்குள் யாரும் இல்லாத நேரத்தில் சிங்கம் நுழைந்து பூனையைத் தாக்கியுள்ளது.
வீட்டிற்குள் சிங்கம் இருப்பதை அறிந்த வீட்டு உரிமையாளர் வன அதிகாரிகளை அழைத்து சிங்கத்தை விரட்ட முயற்சி செய்தார்.
வன அதிகாரி மயக்க ஊசி கொண்ட துப்பாக்கி மூலம் சிங்கத்தைச் சுட்டார்.
அதை தொடர்ந்து சிங்கம் வீட்டிற்கு வெளியே உள்ள சாலையில் ஒடியது.
கொலராடோ வனப்பகுதிகளில் சிங்கம், சிறுத்தைகள் அதிக அளவில் இருக்கும்.