Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

லண்டன்: 5 இடங்களில் நடந்த தாக்குதல்களில் 3 பேர் பலி

லண்டனில் ஒரே நாளில் 5 வெவ்வேறு இடங்களில் நடந்த வன்செயல்களில் 3 பேர் மாண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

லண்டனில் ஒரே நாளில் 5 வெவ்வேறு இடங்களில் நடந்த வன்செயல்களில் 3 பேர் மாண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

லண்டனின் தென் பகுதியில் நேற்று முன்தினம் 18 வயது ஆடவர் கத்திக் குத்து காயங்களால் மாண்டார்.

பின்னர் தென்-கிழக்குப் பகுதியில், 19 வயது ஆடவர் துப்பாக்கியால் சுடப்பட்டு மாண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நேற்று மதியம் 30 வயது ஆடவர் டவர் ஹம்லெட்ஸ் (Tower Hamlets) பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு மாண்டதாக அதிகாரிகள் கூறினர்.

மேலும் இரண்டு இடங்களில் கத்திக் குத்துச் சம்பவங்கள் நேர்ந்தன.

அவற்றில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வன்செயல்கள் தொடர்பாக லண்டன் மேயர் சாதிக் கான் வருத்தம் தெரிவித்திருந்தார்.

காவல்துறையை விழிப்புநிலையில் இருக்கும்படியும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்