லண்டன்: கிருமிப்பரவல் கட்டுப்பாடுகளுக்கு எதிரான பேரணியில் 4 காவல்துறை அதிகாரிகள் காயம்
லண்டன் நகரில் பேரணியின்போது ஏற்பட்ட சிறு மோதல்களில் காவல்துறை அதிகாரிகள் நால்வர் காயமடைந்தனர்.
லண்டன் நகரில் பேரணியின்போது ஏற்பட்ட சிறு மோதல்களில் காவல்துறை அதிகாரிகள் நால்வர் காயமடைந்தனர்.
கிருமிப்பரவல் தொடர்பான கட்டுப்பாடுகளை எதிர்த்து 10,000க்கும் அதிகமானோர் டிரஃபல்கார் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மோதல்களையடுத்து 10 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.
பிரிட்டனில் சென்ற வாரத் தொடக்கத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கிருமித்தொற்று தொடர்பான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கினார்.