லண்டன் லாரியில் மாண்ட 39 பேரைத் தாயகம் கொண்டுசேர்க்கும் பணிகள்
லண்டனில் சென்ற மாதம் ஒரு கொள்கலன் லாரியில் மாண்ட 39 பேர் தன்னுடைய குடிமக்கள் என்று வியட்நாம் உறுதிப்படுத்தியுள்ளது.
லண்டனில் சென்ற மாதம் ஒரு கொள்கலன் லாரியில் மாண்ட 39 பேர் தன்னுடைய குடிமக்கள் என்று வியட்நாம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன் தொடர்பில் 11 பேரைக் கைது செய்த வியட்நாம் அதிகாரிகள் அவர்கள் மீது ஆள் கடத்தல் குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளனர்.
மாண்டோரின் உடல்கள் முறையாக அடையாளம் காணப்பட்டு அவர்களின் குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது.
மாண்டோரின் உடல்களைச் சீக்கிரமாகத் தாயகம் கொண்டு செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை லண்டனில் உள்ள தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக வியட்நாம் தெரிவித்துள்ளது.