ச்சீய்.....உலக அதிசயத்தை அசிங்கப்படுத்தியதாக சந்தேகம்... சுற்றுப்பயணிகள் ஆறு பேர் கைது
உலக அதிசயங்களில் ஒன்றான மச்சு பிச்சுவில் மலம் கழித்த சந்தேகத்தின் பேரில் 6 சுற்றுப்பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உலக அதிசயங்களில் ஒன்றான மச்சு பிச்சுவில் மலம் கழித்த சந்தேகத்தின் பேரில் 6 சுற்றுப்பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 6 பேரும், கலாசாரச் சிறப்புமிக்க பெரு நாட்டின் மச்சு பிச்சுவுக்குச் சுற்றுலா சென்றனர்.
அந்த மலைப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க Temple of the Sun என்ற ஆலயத்தில், சுற்றுப்பயணிகள் மலம் கழித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்குச் சென்ற பூங்கா அதிகாரிகளும் காவல்துறையினரும், அவர்களைக் கைது செய்தனர்.
சுற்றுப்பயணிகள், மச்சு பிச்சுவின் மரபைச் சீரழிக்கும் வகையில் நடந்துகொண்டது நிரூபிக்கப்பட்டால், அந்தப் பெண்களுக்கு குறைந்தது 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.