Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இரண்டு மில்லியன் டாலருக்கு குச்சி மிட்டாய்கள் வாங்கத் திட்டம் - பதவியிலிருந்து நீக்கப்பட்ட அமைச்சர்

மடகாஸ்கார்: பள்ளிக் குழந்தைகளுக்காக சுமார் இரண்டு மில்லியன் டாலர் செலவில் குச்சி மிட்டாய்கள் வாங்கத் திட்டமிட்ட அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 

வாசிப்புநேரம் -
இரண்டு மில்லியன் டாலருக்கு குச்சி மிட்டாய்கள் வாங்கத் திட்டம் - பதவியிலிருந்து நீக்கப்பட்ட அமைச்சர்

படம்: Pixabay

மடகாஸ்கார்: பள்ளிக் குழந்தைகளுக்காக சுமார் இரண்டு மில்லியன் டாலர் செலவில் குச்சி மிட்டாய்கள் வாங்கத் திட்டமிட்ட அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

மடகாஸ்கர் அதிபர் அண்ட்ரே ரஜோலினா, கிருமித்தொற்றைக் குணப்படுத்த Covid-Organics என்ற மூலிகை மருந்தைப் பரிந்துரை செய்துள்ளார். அது கசப்புமிக்கது.

பள்ளிப் பிள்ளைகள் அந்த மருந்தைக் குடிக்கும்போது கசப்புத் தெரியாமல் இருப்பதற்காக அவர்கள் ஒவ்வொருவருக்கும் மூன்று குச்சி மிட்டாய்கள் வழங்கத் திட்டமிட்டார் கல்வியமைச்சர் ஜாசோ அட்ரியமனானா.

அதற்காக அவர் அறிவித்திருந்த தொகை சுமார் இரண்டு மில்லியன் டாலர்.

இருப்பினும், அதிபர் ரஜோலினா அந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், கல்வியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்