புதிய அரசாங்கம், பொறுப்பேற்கும் முதல் 100 நாள்களில் அதன் செயல்திறனை வெளிப்படுத்தும்: மலேசிய மாமன்னர்
மலேசியாவின் புதிய அரசாங்கம், பொறுப்பேற்ற முதல் 100 நாள்களிலேயே அதன் செயல்திறனை வெளிப்படுத்த இயலும் என்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா (Sultan Abdullah) நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் புதிய அரசாங்கம், பொறுப்பேற்ற முதல் 100 நாள்களிலேயே அதன் செயல்திறனை வெளிப்படுத்த இயலும் என்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா (Sultan Abdullah) நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கும் சவால்களைக் கையாள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
புதிய அரசாங்கத்தின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தில் மலேசிய மாமன்னர் உரையாற்றினார்.
COVID-19 தடுப்புமருந்தை மலேசியாவுக்கு அனுப்பி வைத்ததற்கு பிரிட்டன், ஜப்பான், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், சவுதி அரேபியா ஆகியவற்றுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
கிருமித்தொற்றால் மாண்டோருக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறும் மாமன்னர் மலேசியர்களைக் கேட்டுக்கொண்டார்.