மிக மோசமான ஆபாசக் காட்சிகளைக் கொண்ட காணொளிகளால் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட மலேசியர்
மிகவும் மோசமான ஆபாசக் காட்சிகளையும் வன்முறைக் காட்சிகளையும் கொண்ட காணொளிகளைக் கைத்தொலைபேசியில் கொண்டிருந்த மலேசியச் சுற்றுப்பயணி இன்று (ஜூலை 13) ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
ஆஸ்திரேலியா: மிகவும் மோசமான ஆபாசக் காட்சிகளையும் வன்முறைக் காட்சிகளையும் கொண்ட காணொளிகளைக் கைத்தொலைபேசியில் கொண்டிருந்த மலேசியச் சுற்றுப்பயணி இன்று (ஜூலை 13) ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
பெர்த் அனைத்துலக விமான நிலையத்தில் வழக்கம் போல பைகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது அந்த 43 வயது ஆடவரின் கைத்தொலைபேசியில் காணொளிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
புதன்கிழமை அன்று கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட விமானத்தில் பெர்த் சென்றடைந்த அந்த ஆடவரிடம் காணொளிகள் கண்டுபிடிக்கப்பட்டதன் தொடர்பில் அவர் தடுத்து வைக்கப்பட்டார்.
சுற்றுப்பயண விசாவை ரத்து செய்து கைத்தொலைபேசியைப் பறிமுதல் செய்து ஆஸ்திரேலியா அந்த ஆடவரை இன்று மீண்டும் மலேசியாவிற்கு அனுப்பி வைத்தது.
இத்தகைய ஆபாசப் படங்கள், பிள்ளைகளைத் துன்புறுத்தி எடுக்கப்படும் படங்கள் ஆகியவை ஆஸ்திரேலியாவில் அனுமதிக்கப்பட மாட்டா என்றும் அவற்றைக் கண்டுபிடிக்க தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.