Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கால்கள் உடைந்தாலும் தளராமல் 2 நாள்கள் தவழ்ந்து வந்த ஆடவர்

ஆஸ்திரேலியாவில் காட்டுப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஓர் ஆடவர், தடுக்கி அருவிக்குள் விழுந்ததால் அவருடைய கால்கள் முறிந்து விட்டன.  

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவில் காட்டுப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஓர் ஆடவர், தடுக்கி அருவிக்குள் விழுந்ததால் அவருடைய கால்கள் முறிந்து விட்டன.

ஆறு மீட்டர் உயரத்திலிருந்து விழுந்ததால், 54 வயது நீல் பார்க்கரின் கை மணிக்கட்டு, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

ஆளரவமற்ற காட்டுப் பகுதியில், எவரையும் தொடர்புகொள்ள முடியவில்லை.

வலியைத் தாங்கிக் கொண்டு, உடைந்து தொங்கிய கால்களில் கட்டுப் போட்டுக்கொண்டார்.

கொஞ்சம் கொஞ்சமாகத் தவழ்ந்து மூன்றரை கிலோமீட்டர் பாதையை இரண்டு நாள்களில் கடந்தார்.

தக்க சமயத்தில் மீட்புக் குழுவின் ஹெலிகாப்ட்டரை அவர் பார்த்தார், அதிலிருந்த மீட்புக் குழுவினரும் பார்க்கரைப் பார்த்தது அவருடைய நல்ல நேரம். விரைந்து செயல்பட்ட குழுவினர் அவரை உடனடியாக மீட்டனர்.

வலியோடு தவழ்ந்து செல்லும் போது குடும்பத்தாரின் எண்ணமே தமக்கு ஊக்கமளித்ததாகக் கூறினார் பார்க்கர்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்