Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தனிமைப்படுத்தப்பட்ட ஆடவர் ஹோட்டலின் மெத்தை உறைகளைக் கட்டி 4ஆம் மாடியிலிருந்து தப்பித்தார்... எங்கு?

ஆஸ்திரேலியாவில் ஓர் ஆடவர், தாம் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஹோட்டலின் 4ஆம் மாடியிலிருந்து தப்பித்துள்ளார். 

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவில் ஓர் ஆடவர், தாம் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஹோட்டலின் 4ஆம் மாடியிலிருந்து தப்பித்துள்ளார்.

பிரிஸ்பேனிலிருந்து அவர் பெர்த் நகருக்கு உள்நாட்டு விமானம் மூலம் சென்றிருந்தார்.

கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகளால் அந்த ஆடவர் அங்கு நுழைய அனுமதிக்கப்படவில்லை.

48 மணி நேரத்துக்குள்ளாக அந்த மாநிலத்திலிருந்து வெளியேறும்படி அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். பின், தனிமைப்படுத்தப்பட, அவர் ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவர், மெத்தை உறைகளை ஒன்றோடு ஒன்றாகக் கட்டி,
அதிலிருந்து ஒரு நீண்ட கயிற்றைப் போல் உருவாக்கினார். பின், அதைக்கொண்டு அவர் ஹோட்டலின் சன்னல் வழியாகக் கீழே இறங்கினார் எனக் காவல்துறை தகவல் அளித்தது.

சுமார் 8 மணி நேரத்துக்குள் காவல்துறை அவரைக் கைது செய்தது. பொய்த்தகவல் வழங்கியதாகவும், விடுக்கப்பட்ட உத்தரவுப்படி நடந்துகொள்ளவில்லை என்றும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்