பேருந்திலிருந்து முதியவரைத் தள்ளிக் கொன்றதாக மாது மீது குற்றச்சாட்டு
அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் பேருந்திலிருந்து தள்ளிவிடப்பட்ட முதியவர், ஒரு மாதம் கழித்து மாண்டதைத் தொடர்ந்து 25 வயது மாது கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் பேருந்திலிருந்து தள்ளிவிடப்பட்ட முதியவர், ஒரு மாதம் கழித்து மாண்டதைத் தொடர்ந்து 25 வயது மாது கைது செய்யப்பட்டுள்ளார்.
கடேஷா பிஷப் என்னும் அந்த மாது, 74 வயது திரு சேர்ஜ் போர்னியரை மார்ச் 21 அன்று பேருந்திலிருந்து தள்ளிவிட்டதாகக் காவல்துறை குறிப்பிட்டது.
வாக்குவாதத்தில் ஆரம்பித்த அந்த சண்டை, விபரீதத்தில் முடிந்தது.
அந்தச் சம்பவம், கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி இருந்தது.
கீழே விழுந்து எழுந்து கொண்டதும், தமக்கு மருத்துவ கவனிப்பு தேவையில்லை என்று கூறிவிட்டார் முதியவர்.
இருப்பினும், ஒரு மாதம் கழித்து, மார்பில் ஏற்பட்ட காயத்தால் உண்டான சிக்கல்களால் அவர் மாண்டார்.
அதனைத் தொடர்ந்து, கைகலப்பாகக் கருதப்பட்ட சம்பவம், கொலைச் சம்பவமாக வகைப்படுத்தப்பட்டு, மாது கைது செய்யப்பட்டார்.