பிரிட்டன்: கடைத்தொகுதியில் கத்திக் குத்துத் தாக்குதல் - 5 பேர் காயம்
பிரிட்டனின் மென்செஸ்டர் நகரில் உள்ள கடைத்தொகுதியில் 5 பேர் கத்திக் குத்துத் தாக்குதலால் காயமடைந்துள்ளனர்.
பிரிட்டனின் மென்செஸ்டர் நகரில் உள்ள கடைத்தொகுதியில் 5 பேர் கத்திக் குத்துத் தாக்குதலால் காயமடைந்துள்ளனர்.
தாக்குதல் Manchester city கடைத்தொகுதியில் நடந்தது.
கத்தி ஏந்திய ஆடவர் ஒருவர் பல்வேறு நபர்களைத் ஓடி ஓடித் தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
கடைத்தொகுதியில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இத்தாக்குதலின் பின்னணி நோக்கம் என்ன என்பது தெரியவில்லை.
இதன் தொடர்பில், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் விசாரணை செய்துவருகின்றனர்.