நெடுந்தொலைவோட்டத்தில் 2 மணி நேரத்துக்குள் ஓடிய முதல் நபர்
இரண்டு மணி நேரத்துக்குள் நெடுந்தொலைவோட்டத்தை முடித்த முதல் நபர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் ஓட்டப்பந்தய வீரர் எலியுட் கிப்சோகே.
இரண்டு மணி நேரத்துக்குள் நெடுந்தொலைவோட்டத்தை முடித்த முதல் நபர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் ஓட்டப்பந்தய வீரர் எலியுட் கிப்சோகே.
கென்யாவைச் சேர்ந்த கிப்சோகே நெடுந்தொலைவோட்டத்திற்கு 1 மணி நேரம் 59 நிமிடம் 40 விநாடி நேரம் எடுத்துக்கொண்டார்.
2 மணி நேரத்திற்குள் நெடுந்தொலைவோட்டத்தை முடிப்பது சாத்தியமே இல்லை என்று இதுவரை கருதப்பட்டது. அந்த எண்ணத்தைப் பொய்யாக்கிச் சாதனை படைத்துள்ளார் கிப்சோகே.
என்றாலும், அனைத்துலகத் திடல்தட வீரர்களுக்கான நிர்வாக அமைப்பு அந்தச் சாதனையை அங்கீகரிக்கவில்லை.
நெடுந்தொலைவோட்டத்திற்கு உகந்த சூழலில் கிப்சோகே ஓடவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
அவரின் சாதனையைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் #nohumanislimited என்ற விளிச்சொல் பரவி வருகிறது.