சிங்கப்பூருக்கு இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்ற மார்ட்டினா
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், குறிசுடும் வீராங்கனை மார்ட்டினா லிண்ட்சே வெலோசோ சிங்கப்பூருக்கு இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், குறிசுடும் வீராங்கனை மார்ட்டினா லிண்ட்சே வெலோசோ சிங்கப்பூருக்கு இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
50 மீட்டர் நீள்-துப்பாக்கிக் குறிசுடும் போட்டியில் அவர் 621 புள்ளிகளுடன் விளையாட்டுச் சாதனையையும் முறியடித்தார்.
இதற்கு முன்பு திங்கட்கிழமை 10 மீட்டர் நீள்-துப்பாக்கிக் குறிசுடும் போட்டியில் அவர் தங்கத்தை வென்றார்.
இந்தியாவின் தேஜஸ்வானி சாவண்ட், 618.9 என்ற புள்ளிகளுடன் இரண்டாம் நிலையில் வந்தார்.
சிங்கப்பூரின் மற்றொரு குறிசுடும் வீராங்கனை ஜேஸ்மின் செர் 615.6 என்ற புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தைப் பிடித்தார்.