இனி முகக்கவசம் இன்றி வெளியே செல்லலாம்- பெருமையாகக் கூறும் இஸ்ரேல்
இஸ்ரேலில் முதன்முறையாக முகக்கவசங்களின்றி வெளியே சென்றனர் மக்கள்!
இஸ்ரேலில் முதன்முறையாக முகக்கவசங்களின்றி வெளியே சென்றனர் மக்கள்!
ஓராண்டு கழித்து கிருமிப்பரவலுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டதாக இஸ்ரேல் சொன்னது. அதன் மக்கள்தொகையில் பாதிக்கும் அதிகமானோர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
COVID-19 நோய்க்கு எதிரான தடுப்பூசியை ஆக விரைவில் மக்களுக்குக் கொண்டு சேர்த்த நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று.
அங்கு பொது இடங்களில் இனி, மக்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என அந்நாட்டுச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 5 மில்லியன் பேருக்குப் போடப்பட்ட தடுப்பூசி, இஸ்ரேலில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் தினசரி சராசரி எண்ணிக்கையை 10,000இலிருந்து 200க்குக் குறைத்துள்ளது.
பள்ளிகள், உணவகங்கள், மதுக்கூடங்கள் போன்றவற்றை அந்நாடு மீண்டும் திறக்க அனுமதித்துள்ளது.
உட்புறங்களில் ஒன்றுகூடல்கள் இடம்பெறலாம்; ஆனால் அவற்றில் கலந்துகொள்வோர் முகக்கவசங்கள் அணியவேண்டும்.
- AFP