Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியா: இரவு விடுதியில் துப்பாக்கிச் சூட்டு - இருவர் படுகாயம்

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இன்று (ஏப்ரல் 14) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் கடுமையாக காயமடைந்துள்ளனர்.

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: 30 விநாடிகள்)

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இன்று (ஏப்ரல் 14) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் கடுமையாக காயமடைந்துள்ளனர்.

இரவு விடுதியில் நடந்த அந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர்களில் இருவர் மோசமான நிலையில் உள்ளனர்.

சம்பவம் பயங்கரவாதம் தொடர்பானதில்லை என்று நம்புவதாக காவல்துறை கூறியுள்ளது.

மோட்டார் சைக்கிள் கும்பல்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா என்று ஆஸ்திரேலிய காவல்துறை விசாரித்து வருவதாக மெல்பர்னின் The Age newspaper தெரிவித்துள்ளது.

துப்பாக்கிகள் தொடர்பான கடும் சட்டங்கள் உள்ள ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் ஏற்படுவது அரிது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்