மெக்சிகோவில் வீட்டின் மீது மோதிய பேருந்து- 19 பேர் மரணம்
மெக்சிகோ சிட்டியில் நேர்ந்த பேருந்து விபத்தில் குறைந்தது 19 பேர் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெக்சிகோ சிட்டியில் நேர்ந்த பேருந்து விபத்தில் குறைந்தது 19 பேர் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணிகளுக்கான அந்தப் பேருந்து நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு வீட்டின் மீது மோதியது. அதில் மேலும் 20 பேர் காயமுற்றனர்.
மெக்சிகோவில் உள்ள சமயத் தளம் ஒன்றை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, அந்தப் பேருந்தின் நிறுத்தும் விசை செயல் இழந்ததாக மெக்சிகோ ஊடக அறிக்கைகள் குறிப்பிட்டன.
இருப்பினும், அதிகாரிகள், விபத்துக்கான மற்ற காரணங்களை வெளியிடவில்லை.
விபத்து நேர்ந்தவுடன், அந்த இடத்துக்கு 10 அவசர மருத்துவ வாகனங்கள் அனுப்பப்பட்டதாக அந்த வட்டாரத்தின் செஞ்சிலுவைச் சங்கம் சொன்னது.
சிலர் வான்வழியாக மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.