Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மெக்சிக்கோவில் கனரக வாகன விபத்து- 49 பேர் மரணம்

மெக்சிக்கோவில் கனரக வாகன விபத்து- 49 பேர் மரணம்

வாசிப்புநேரம் -

மெக்சிக்கோவில் கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 49 பேர் மாண்டதாக அஞ்சப்படுகிறது.

மாண்டவர்களில் பெரும்பாலானோர் மத்திய அமெரிக்காவில் இருந்து வந்த குடியேறிகள் என்று நம்பப்படுகிறது.

விபத்து தென் மெக்சிக்கோவின் சியப்பாஸ் (Chiapas) மாநிலத்தில் நேற்று நேர்ந்தது.

கனரக வாகனம் சாலையில் வளைந்து திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

மாண்டவர்களில் பெண்களும் குழந்தைகளும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்தில் 58 பேர் காயமுற்றனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

3 பேருக்கு கடுமையாகக் காயங்கள் ஏற்படுள்ளது.

விபத்து மெக்சிக்கோவில் நடந்த ஆக மோசமான சாலை விபத்துகளில் ஒன்று என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய அமெரிக்க நாடுகளில் வறுமை, வன்முறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்
மெக்சிக்கோவைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சி செய்வதாகக் கூறப்படுகிறது.

அதற்காகக் குடியேறிகள் கனரக வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.

-Reuters/yb 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்