Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உக்ரேனிய விமானம் 2 ஈரானிய ஏவுகணைகளால் சுட்டுவீழ்த்தப்பட்டதாகத் தகவல்

உக்ரேனிய விமானத்தை 2 ஈரானிய ஏவுகணைகள் சுட்டுவீழ்த்தியதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
உக்ரேனிய விமானம் 2 ஈரானிய ஏவுகணைகளால் சுட்டுவீழ்த்தப்பட்டதாகத் தகவல்

(படம்: AFP/STR)

உக்ரேனிய விமானத்தை 2 ஈரானிய ஏவுகணைகள் சுட்டுவீழ்த்தியதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

பாதுகாப்புக் கேமாரக்களின் காணொளிப் பதிவை உறுதி செய்த பின் அந்தத் தகவலை டைம்ஸ் வெளியிட்டது.

காணொளிப் பதிவில் ஏவுகணை ஒன்று பாய்ச்சப்பட்ட 30 விநாடி கழித்து மற்றோர் ஏவுகணை பாய்ச்சப்பட்டது தெரிய வந்துள்ளது.

தீப்பற்றிய உக்ரேனிய விமானம் திரும்பி டெஹ்ரான் அனைத்துலக விமான நிலையத்திற்குச் செல்ல முயற்சி மேற்கொள்வதை காணொளிப் பதிவு காட்டியது.

ஆனால், சில நிமிடங்களில், விமானம் வெடித்துச் சிதறியது, காணொணிப் பதிவில் தெரிந்தது.

விபத்தில், விமானத்தில் இருந்த 176 பேரும் மாண்டனர்.

அதன் தொடர்பில் சிலரைக் கைது செய்திருப்பதாக ஈரான் தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்