COVID-19 தடுப்புமருந்தின் விலை 25 டாலருக்கும் 37 டாலருக்கும் இடைப்பட்டிருக்கும்: Moderna
Moderna மருந்தாக்க நிறுவனம், அதன் COVID-19 தடுப்புமருந்தை 25 டாலருக்கும் 37 டாலருக்கும் இடைப்பட்ட விலையில் அரசாங்கங்களுக்கு விற்கவுள்ளதாய்த் தெரிவித்துள்ளது.
Moderna மருந்தாக்க நிறுவனம், அதன் COVID-19 தடுப்புமருந்தை 25 டாலருக்கும் 37 டாலருக்கும் இடைப்பட்ட விலையில் அரசாங்கங்களுக்கு விற்கவுள்ளதாய்த் தெரிவித்துள்ளது.
அது ஏறக்குறைய, சளிக்காய்ச்சலுக்கான தடுப்புமருந்தின் விலைக்கு நிகரானது என்பதை Modernaவின் தலைமை நிர்வாக அதிகாரி சுட்டினார்.
நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்திவரும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், 25 டாலருக்கும் குறைவான விலையில் தடுப்புமருந்தைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஒன்றியம் விரும்புவதாய்த் தெரிவித்தனர்.
Moderna நிறுவனம், கொரோனா கிருமிக்கு எதிரான அதன் புதிய சோதனைநிலைத் தடுப்புமருந்து சுமார் 95 விழுக்காடு வெற்றிகரமாய்ச் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளது.
மனிதர்களிடம் நடத்தப்பட்டுவரும் இறுதிநிலைச் சோதனையில் இருந்து கிடைக்கப்பெற்ற இடைக்காலத் தகவல்களின் அடிப்படையில், Moderna அதனைத் தெரிவித்தது.