Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலக அளவில் தேடப்பட்ட கொலம்பிய போதைப்பொருள் கடத்தல் மன்னன் பிடிபட்டார்

உலக அளவில் தேடப்பட்ட கொலம்பிய போதைப்பொருள் கடத்தல் மன்னன் காவல்துறையிடம் பிடி்பட்டார்.

வாசிப்புநேரம் -

உலக அளவில் தேடப்பட்ட கொலம்பிய போதைப்பொருள் கடத்தல் மன்னன் காவல்துறையிடம் பிடி்பட்டார்.

டைரோ அன்டோனியோ உசுகா (Dairo Antonio Usuga) என்னும் அந்த நபர் நேற்று கைது செய்யப்பட்டதாகக் கொலம்பிய அரசாங்கம் தெரிவித்தது.

Otoniel என்றழைக்கப்படும் டைரோவைப் பிடிப்பதில் துப்புக் கொடுப்பவர்களுக்கு 800,000 டாலர் பரிசுத்தொகையைக் கொலம்பியா அறிவித்திருந்தது.

அமெரிக்காவும் 5 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அறிவித்திருந்தது.

டைரோவின் கும்பல் கொலம்பியாவில் ஆக பலம்வாய்ந்த கடத்தல் குழு.

50 வயது டைரோவைப் பிடித்ததன்மூலம் பெரிய வெற்றி கிடைத்துள்ளதாகக் கொல்பிய அரசாங்கம் கூறியது.

சுமார் 5 ஆண்டுகளாக டைரோவை ஆயிரத்திற்கும் அதிகமான அதிகாரிகள் தேடிவந்தனர்.

உலக அளவில் கொக்கைன் போதைப்பொருளை ஏற்றுமதி செய்வதில் கொலம்பியா முன்னணி வகிக்கிறது.



- AGENCIES/nh
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்