Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மியன்மாரில் ஆங் சான் சூச்சிக்கு எதிராகப் புதிய ஊழல் வழக்குகள்

அரசாங்கத்துக்குச் சொந்தமான Global New Light of Myanmar நாளிதழ் அதனைத் தெரிவித்தது.

வாசிப்புநேரம் -

மியன்மாரின் முன்னாள் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சிக்கு (Aung San Suu Kyi) எதிராகக் புதிய ஊழல் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

அவரது அரசாங்கத்தில் சேவையாற்றிய முன்னாள் அதிகாரிகள் சிலர் மீதும் புதிய ஊழல் வழக்குகள் தொடுக்கப்பட்டன.

அரசாங்கத்துக்குச் சொந்தமான Global New Light of Myanmar நாளிதழ் அதனைத் தெரிவித்தது.

அறநிறுவனம் ஒன்றுக்கான நிலத்தைத் தவறாகப் பயன்படுத்தியதன் தொடர்பில் திருவாட்டி சூச்சி மீது புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தல்களில் திருவாட்டி சூச்சியின் கட்சி மோசடி செய்ததாகக் கூறி, மியன்மார் ராணுவம் ஆட்சியைக் கவிழ்த்தது.

எனினும், அந்தக் குற்றச்சாட்டை முன்னைய தேர்தல் ஆணையமும் அனைத்துலகக் கண்காணிப்பு அமைப்புகளும் நிராகரித்துள்ளன.

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்